Header Ads Widget

Responsive Advertisement

மாமல்லபுரம் சொல்வது



மகேந்திரன் பெயர்கொண்டோர் ஆயிரம் பேர் வருவார்,
மாமல்லன் என்பவன் எனைத்தவிர வேறு யார்? 
மாமல்லபுரம் என்று பெயர் வைத்துவிட்டாலே 
காலமெல்லாம் நிலைத்து நிற்கும் எந்தன் மறு பெயர்,  
சொல்லியே பெயர் வைத்தான் கல்லுக்கும் உயிர் கொடுத்தான்
பல்லாண்டு கடந்தபின்னும்
பல்லவன் நிலைகொண்டான்.

பாறையிலே கோயில் கண்ட பழம்பெரும் பூமி,
சிலை வடித்தும் கலை வளர்த்தும் உயர்ந்து நின்ற பூமி,
போருக்கும் அமைதிக்கும் சாட்சி நின்ற பூமி,
சாட்சியாக நிற்கிறது பேச்சு வார்த்தை முடிக்க.

தலைநகரில் காலங்களாய் நடக்கும் பேச்சு வார்த்தை,
ஒரு சாரார் எதிர்ப்பார் என்று மாற்றினார் இடத்தை.
சரித்திரத்தில் இடம்பிடித்த ஊராம் மாமல்லை 
கொடுக்காது இருவருக்கும் சிறிது கூடத் தொல்லை.

நலம் பல பயக்கும்
உறவுகள் செழிக்கும், வேறுபாட்டை அழிக்கும்,
எம் கண்டம் தழைக்கும்
உலகமே அதைக்கண்டு இந்நாளில் வியக்கும்
மாமல்லை அதற்கோ சாட்சியம் வகிக்கும்
மீண்டும் சரித்திரத்தில் அதன் பெயர் நிலைக்கும்.

*சுலீ. அனில் குமார்*