கலை-தலை
வாழ்க்கை  ஒரு கலை
வாழ்வில் இல்லறம் 
என்றும் அதன்  தலை
மனிதனைப் புனிதனாய் மாற்றும் மாண்பு
அதன்பின் ஏற்பது நோன்பு.
ஆண்-பெண்
வையம் செழிக்க
மானுடம் தழைக்கும்
ஆண்-பெண் என
இருபால் இறைவன்
படைப்பு.
இருபால் சிறப்புடன் இருக்க 
வள்ளுவர்  வகுத்தமை  முப்பால்.
சிறப்பால் இருக்கிறது
கால எல்லைக்கு அப்பால்.
கு.ஜெயந்தி 
சிதம்பரம்
