Header Ads Widget

Responsive Advertisement

கோலம்



பூவுலகப் பெண்கள்

அதிகாலையில் புள்ளி

வைத்து கோலமிடுகிறார்கள்


ஆகாய மங்கை 

இரவு முழுதும் 

நட்சத்திரங்களாய்

புள்ளிகளை வைத்து

கோலமிடுவதற்குள்

பொழுதும் புலர்ந்து

பகலவனும் தோன்றுவதால்

புள்ளிகளும் மறைவதால்

ஒரு நாள் கூட அவளால் கோலத்தை முழுவதுமாய்

போட முடியவில்லை

பெண்களே ஆகாய 

மங்கைக்கு முடிந்தால் உதவலாமே


தி.பத்மாசினி