Header Ads Widget

Responsive Advertisement

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸா கொலைகார வைரஸா
இரக்கமே இல்லாமல் இப்படிக் கொலை செய்கிறதே
பாவத்தின் சம்பளம் மரணம் என்று சொல்கிறதா? 
உயிரோடு தின்பவரின் உயிரெடுப்பேன் என்கிறதா?

திடீரென்று வந்தநோயால் திகைத்துப் போய் நின்றனராம்
திகைப்பு விலகிப் போகுமுன்னே பல பலிகள் தந்தனராம்
வீடுவீடாய்ச் சென்று பல சோதனைகள் செய்கிறாராம் 
வீட்டுக்குள் பூட்டிவைத்து உயிர்துறக்க வைக்கிறாராம்.

கல்வி கற்கச் சென்றவர்கள்  கதறல்கள் கேட்கிறது,
வேலைதேடிச் சென்றவர்கள் வேதனைகள் புரிகிறது, 
என்னே கொடுமையிது புலம்பத்தான் முடிகிறது,
என்று தீரும் இக்கொடுமை கேள்விதான் எழுகிறது.

கதறுகின்ற மருத்துவர்கள் கதறல்கள் என்ன செய்யும்!
கண்டு சொன்ன மருத்துவரின் உயிர்த்தியாகம் என்ன செய்யும்!
உண்மைகளை மறைத்துவிட்டால் உலகம் தான் என்ன செய்யும்!
உயிர்கொடுத்த போதிதர்மன் ஆவி கூட என்ன செய்யும்!

திடீரென்று பரவிவிட்டால் நிர்வாகம் என்ன செய்யும்
நாடு திரும்பும் தன்மக்களை மற்றநாடு என்ன செய்யும்
உலகெங்கும் பரவாமல் இருக்க உலகு என்ன செய்யும்
உடனே கட்டுப்படுத்தினால் தான் இவ்வுலகம் இனி உய்யும்.

இல்லையென்றால் தலைமுறைகள்..
இல்லையென்றால் தலைமுறைகள் சீனாவை வையும்,
பழி மழை பெய்யும்.

*கிராத்தூரான்*