Header Ads Widget

Responsive Advertisement

*கறைபடும் கண்ணீர் துளிகள்*



எவரையும்
*உலகமென்று*
நினைத்து விடாதே

குறுகிய
வட்டமாகிய அந்த
*உன் உலகத்தில்*
*நீ பத்தோடு*
*பதினொன்று தான்*
*என்று புரியும் போது*
*புதைந்து போவாய்*
புழுதியில் அல்ல
புதை மணலில்

நீ உயிர் என்று
நினைப்பவரின்
நினைவில் கூட
நீ இல்லை என்று
தெரியும் போது
உடைந்து போவாய்
*ஒன்றிரண்டாக அல்ல*
*சுக்கல் சுக்கலாக*

உன் மட்டில்
அன்பு வைத்து
அனாதையாகி
விடாதே

புரிதல்கள்
நிறைந்த
மனதில் கூட
*சமயத்தில்*
*சில சறுக்கல்கள்*
வந்து விழும் போது

புரிதலே
இல்லாத
இடத்தில்
தனித்து நின்று
புலம்பிக் கொண்டு
இருக்காதே

*புரிதலின்*
*ஆழம் என்ன*
*என்பதை*
*முதலில் நீ*
*புரிந்து கொள்*

விரைவில்
தெளிந்து
விடுவாய்

உன்மீது
உண்மையான அன்பு இல்லாதவர்களுக்காக
வீணாக உன்
*கண்ணீர் துளிகளை*
*கறைப்படுத்தாதே*

காலத்தின்
பிடியோ வலியது
கடந்து விடுவாய்
கவலை கொள்ளாதே

எவரையும்
*உலகம் என்று*
நினைத்து விடாதே

✍️கவிரசிகை.......
          .......சுகந்தீனா