Header Ads Widget

Responsive Advertisement

காகிதம் தேடும் பேனா

காகிதமும் பேனாவும்
ஒருநாள் இப்படியாகத்தானே
கதைத்துக்கொண்டிருந்தன!
உன்னை பளீரென காட்டும்
நானே பெருமையானவன்
என்றது காகிதம்....!
நான் உன்னில் இல்லையெனில்
உன் புகலிடம் குப்பைத்தொட்டியே!
பெருமையின் உச்சத்தில் பேனா!
பொறுமையுடன் நான் சொன்னேன்.....
நீவீர் இருவரும் இணைந்திருந்தால்
மட்டுமே என் கவிதைக்கு பெருமை!
ஏனெனில்......
வெறுமையில் ஆயிரம்
பேரை நேசிக்கின்றேன்!
வெறும் மை இல்லாமல்
வெற்றுத்தாளை மட்டும்
நேசிக்கும் பேனாவைப் போல!
என் அன்பை யாருக்கும்
புரியவைக்க முடியாததால் ....
முன்னுரை எழுதும் முன்பே
முடிவுரையை மட்டுமே
எழுதிவைத்துவிட்டு போகிறேன்!
அதிலும்
ஐந்தடி உயரபேனா கொண்டு
சிவப்பு மையினால் .....!
என்னை எனக்காக மட்டுமே
நேசிக்கும் வெள்ளை( மனங்களில்)
காகிதங்களில்........!
என் கவிப்பேனா
காகிதங்களை முத்தமிட்டதால்
பிறந்த கவிக்குழந்தை இது!
இதற்கு காதல் எனும் பெயரிட்டு
உங்கள் கரங்களில் தவழ
உள்ளார்ந்த அன்புடன் தருகிறேன்!
தயவு செய்து அதற்கு
காமப்பால் புகட்டி கசக்கி
எறிந்துவிடாதீர்கள்! பின்பு......
மை நிரம்பிய என் பேனா
தீ நிரப்பி வந்து உம்மை
காமசம்ஹாரம் செய்துவிட
வாய்ப்பளித்து விடாதீர்கள்!
🌹🌹வத்சலா 🌹🌹