Header Ads Widget

Responsive Advertisement

இன்பம் துன்பம்.



நடந்து செல்லும் பாதை முழுதும்
கல்லும் முள்ளுமாய் 
துன்பம் கொடுக்கும் முட்களாய்
நிறைந்திருந்த போதும் 
நம்பிக்கை எனும் காலணி மட்டுமே
முன்னேற்ற பாதையில் .....
நடத்திச்செல்கிறது இன்பம்
எனும் பலவழிப் பாதை!
சூரியன் குத்திக்கிழித்த
துன்பம் தந்த வேனலின்
அனுபவம் மட்டுமே நிலவின்
குளுமையை அறியும்
இன்பத்தின் அகராதியை
இன்னமும் தேடியபடியே
இருந்திருப்போம் நாம்.....!
கொள்ளை நோயின்
கொடூரமுக நர்த்தனத்துன்பம்
தெரிந்தோ தெரியாமலோ
அனுமதிக்கப்பட்டதாலேயே....,
உறவுச்சங்கிலிகள் 
தூரத்து சாரலாய் இணைந்து
தூவானமாய் இன்பம் தந்திருக்குமோ?
சிட்டுக்குருவிகளை கொன்றொழித்து
சிங்காரவீடமைத்து 
இன்பம் கண்டோம் !இதோ.....
எரிமலையாய் வெடித்துக் கிளம்பும்
வெட்டுக்கிளிகளுக் ஆரத்தி
எடுத்து அழைக்க ஆயத்தமாய்
நின்றே ——துன்பத்தையும்
ஏற்றேயாகும் கட்டாயத்துக்குள்
நம்மை நாமே ஆட்படுத்தத்தான்
நரக(ல்)வாழ்வை வரமாய்
கொண்டோமா !                        சிந்திக்க நமக்கு
இன்னமும் நேரமுண்டு....!
சிந்திப்போமா?
🌹🌹வத்சலா🌹🌹