Header Ads Widget

Responsive Advertisement

குடும்பமே அச்சாணி



உலகமொரு தேரென்றால் குடும்பமே அதன் அச்சாணி!
சின்னஞ்சிறு குடும்பங்களின்
வலிமையால்தான்
உலகமாம் தேரின் ஓட்டம் அழகாகிறது!
குடும்பத்தின் அச்சாணி கணவனுக்கும் மனைவிக்கும் இடையேயான பிணைப்பு!
தலையில் சூடும் பூவின்காம்பின்
பாரம் தாங்குவாளா இவள் என்று துடிக்கும் கணவனும்
இறைவா என்நலத்தையும் இவருக்கே சேர்த்துக் கொடுத்துவிடு!என்று இறைஞ்சும் மனைவியும் இருக்கும் வீட்டில் அன்பின் பிணைப்பு அதிகமாக இருக்கும்! வலுவான அன்பிலே பிறக்கும் குழந்தைகள் அறிவோடு திகழ்வார்கள்!
நாரால் தொடுத்த அழகிய பூமாலையாய்க் குடும்பம் திகழும்!
குடும்பத்தின் உறவுகளிடையே இருக்கும் பிணைப்பு உடையாமல் காப்பது கணவன்மனைவியரின்
தலையாயக் கடமையாகும்!
பிணைப்பு உடைந்தால் அந்தோ! வீடுகள் துண்டாகும்!
வீடுகள் துண்டானால் நாடுகள் துண்டாகும்!
நாடுகள் துண்டானால் உலகத்தின் அச்சாணி முறியும்!
முறிந்தால் உலகத்தேர் எவ்வாறு ஓடும்?
ஆதலின் குடும்பத்தை வலுவாக்குவோம்!அன்பென்ற ஆயுதத்தால்!

த.ஹேமாவதி
கோளூர்