Header Ads Widget

Responsive Advertisement

தாய் மொழி* (பிப்ரவரி, 21 - உலக தாய்மொழி தினம்)

*

கருவறை துவங்கி கல்லறை வரைக்கும்
உயிராகி, உணர்வாகி உருவாகி, திருவாகி
இணையாக, துணையாக, இதயமாக நிற்கும் மொழி.

எந்நாடு சென்றாலும் எம்மொழியில் பேசினாலும்
எங்குதான் கேட்டாலும் செவிகொடுக்க வைக்கும் மொழி.

தாயை இகழ்ந்தவனை யார் தடுத்தும் விடமாட்டேன்,
தாய்மொழியை இகழ்ந்தவனை தாய் தடுத்தும் விடமாட்டேன்
என்றே உணர்வோடு பலரைப்பேச வைக்கும் மொழி.

உடன் இல்லாத் தாய் அவளின் பிரிவதனை, நினைவதனைப்
பலநேரம் உணராமல் இருப்பதற்கும் நினைப்பதற்கும்
காரணமாய் இருக்கின்ற கனிவான இனிய மொழி.

கல்லாத பலபேர்க்கும், இல்லாத பலபேர்க்கும்
சொல்லாகி, பொருளாகி, உணவாகி, வாழ்வாகி
துணை நிற்கும் அன்பின் மொழி
அது தானே தாய் மொழி.

*கிராத்தூரான்*