Header Ads Widget

Responsive Advertisement

தேர்



அன்னை போல் என்னை இங்கு தத்தெடுப்பது யாரு?!
எடுத்து நீயும் அன்னையாய் இங்கு ஏற்றி விடு தேரு,,,
வென்று நான் வரவும் மெல்ல நீயும் வந்து பாரு,,,
உலகமே வியக்கும் சொல்லை நீயும் வந்து கேளு,,,,
அன்னையே நீயும் வந்து கேளு!

யாருக்கு யார் என்று யாரறிவார் உலகிலே,,, தாய்க்கு பிள்ளை தானே நாளெல்லாம் நினைவிலே,,,
நீ மட்டும் என்னை மறந்து போனதெங்கே சொல்லு,,,
ஊர் கூடி வணங்கும் போது ஏறியது ஏனோ தேரு,,,

உன்னையே நம்பித்தானே உலகை காண வந்தேன்,,,
என்னையே மறந்து போக தனியாளா நின்றேன்,,,
கண்ணைத் தான் பார்த்து நீயும் பசி போக்கும் தாயே,,,
விண்னையே பார்க்க வைத்து ஏன் மறைந்தாயே,,,!

உன்னைப்போல் அன்னையர் எல்லாம் உலகில் ஆயிரம் இருக்க,,,
என் மனம் ஏனோ உந்தன் நினைவாலே தடுக்க,,,
கண்களில் வெள்ளம் போல வழிந்தோடும் நீரை,,,,
துடைத்து தான் வணங்குதே அம்மா நீ போன தேரை,,,

ஒற்றுமை வலிமை என்று சொல்லித் தந்த தாயே,,,
தனிமையில் வாழவிட்டு போனதென்ன நியாயம்,,,
நதிக்கரையாய் நீயிருக்க நானும் ஓடி வந்தேன்,,,
இரு கரை மறைந்து போக வழியில் வதியாகி நின்றேன்,,,,

பாலா,,,