Header Ads Widget

Responsive Advertisement

என்னருகே நீயிருந்தால் ...



🙏கடைசி வரிக்காக
படிந்து விடுங்கள் 🙏


தமிழ் போல் என்நெஞ்சில் இருப்பவளே .!
என் நாவினிலே தேன் போல
இனிப்பவளே !
தீராத காற்பனையை  என்னுள்ளே விதைப்பவளே !
தீயின்றி என் கண்ணில் சுடராக நடப்பவளே !
சுட்டுவிடா அனல் தேகம்
அழகாக கொண்டவளே !
எட்டி வைக்கும் நடையில் எல்லாம்
என் முகத்தை பார்ப்பவளே !
அரும்பு மொழியால் எம்கண்களில் ஈரநீரை அழைப்பவளே!
முத்துச் சிரிப்பால்
மகிழ்வின் உச்சம் தருபவளே!
என் மகளே மீரா
என்னருகே நீயிருந்தால் போதுமடி.
அந்த எமனுக்கும்
தருவேன் சவுக்கு அடி .....!!

கவிஞர் ராஜா ஆ
ஒருங்கிணைப்பாளர்
பண்ணுருட்டி முத்தமிழ்ச் சங்கம் .