Header Ads Widget

Responsive Advertisement

இரண்டு .....



முரண்டு பிடிக்கும் மனிதன்கண்ணில் பட்டதெல்லாம் இரண்டிரண்டு,
சிவன் என்போம் சக்தி என்பார்.
பக்தி என்போம் பயம் என்பார்.....


மனித மனம் கேட்டிடாது ஒன்றென்னும் மெய்யை, மனதுக்குள்ளே வளர்த்துவிடும் இரண்டு என்னும் பொய்யை.
குலசாமிக்கு பூஜை செய்வார்_மறந்திடாது.        ஆசாமிக்கும் உண்டங்ேக பெரும் படையல்.....

குரங்குபோல மரம் தாவும் இரட்டைமனம்,
அதைவிட்டிடாது பிடித்து வாழும்மனித குணம் ,
மதியோடு வென்றாலும் சதி என்பாரிங்கே ,
சதிவென்றாலும் கொண்டாடி சாதனை என்பாரே .....

கண்ணிரண்டில் காட்சி ஒன்று தானே ,
காது இரண்டில் ஒலிகள் ஒன்றுதானே ,
இரட்டைகுழல் மூக்கினிலும்  சுவாசம் ஒன்றுதானே,
மனமேஒன்றாக ஒன்றிவிடு ஓருயிர் தானே   .....

*கவிஞர் ராஜா ஆ*
*ஒருங்கிணைப்பாளர்*
*பண்ணுருட்டி முத்தமிழ்ச் சங்கம் .*