கண்டதை எல்லாம் கண்டபடி தின்னாமல் வேண்டியதை மட்டும் வேண்டும் போது தின்றால்...
ருசிக்காக உண்கின்ற பழக்கத்தைத் தவிர்த்துவிட்டு
பசிக்காக உண்கின்ற பழக்கத்தைக் கொண்டு வந்தால்.....
நினைத்த போது எல்லாம் நினைத்ததை உண்ணாமல்
பசித்தபோது மட்டும் பசியாற்ற உண்டால்....
குப்பை கொட்டும் தொட்டிதான் வயிறென்று நினைக்காமல்
இரைப்பை காக்கும் பெட்டி தான் வயிறென்று உணர்ந்தால்.....
இரசாயன ஆலையாய் வயிறை மாற்றாமல்
இதம் தரும் ஆலயமாய் வயிறை வைத்தால்...
வயிறு வாழ்த்தும், வயிறு நிறைந்து வாழ்த்தும்.
*சுலீ. அனில் குமார்