Header Ads Widget

Responsive Advertisement

கூடவே இருந்தது கணிதம் மட்டும் தான்

மனிதன்,

5 வயதில் விரல்களை எண்ணினான்,
10 வயதில் எண்களை எண்ணினான்,
15 வயதில் மதிப்பெண்களை எண்ணினான்,
20 வயதில் தேர்வு வினாக்களை எண்ணினான்
25 வயதில் சம்பளத்தை எண்ணினான்,
30 வயதில் நண்பர்களை எண்ணினான்,
35 வயதில் வாரிசுகளை எண்ணினான்,
40 வயதில் கடன்களை எண்ணினான்,
45 வயதில் நோயை எண்ணினான்,
50 வயதில் சொந்தங்களை எண்ணினான்,
55 வயதில் மாத்திரையை எண்ணினான்,
60 வயதில் பேரக் குழந்தைகளை எண்ணினான்,
அதற்கு பின் வயதை எண்ணினான்,
இறந்த பின், தனக்காக அழும் உள்ளங்களை எண்ணினான்.
எண்ணிப் பார்க்கையில் ,
தன்னிடம் கூடவே இருந்தது
கணிதம் மட்டும் தான்
என எண்ணினான் !