Header Ads Widget

Responsive Advertisement

தண்ணீர் துளிகள் தேடிய கண்ணீர் துளிகள்



💦💧💦💧💦💧💦💧💦💧              விண்ணீர் துளிகள்

வான்வெளியில் வீழ்ந்து வழங்கிடவே

💧  மண்ணீராய் மண்ணில்
நிறைந்து நிலைத்திடவே 💧

தண்ணீர் துளிகள் தேடிய

மனிதனுக்கும்

தனக்கு எதிராகும்💧

💧                     துன்பியல் சோகம்

நாடகமாடும் நிலையாகுதே

💧பின்விளைவு கருதி மூடாமல் விட்டதில்

💧என்றும் எதிர்பாரத  வகையில் சுர்ஜித்சிங் சிறுவனும்

💧 தன்நிலை தடுமாறி துளைக்குள் வீழ்த்திடும் நிலையால்

💧கண்ணீர் துளிகள் தண்ணீர் துளிகளாய் கரைகின்றதே

💧மண்ணில் பிறந்த மாந்தர் அனைவருமே கண்ணீர் துளிகள்

💧தண்ணீராய்க்  கரைந்துருகிடும் மனநிலையில்  வேண்டுகின்றார்

💧எண்ணமும் செயலும் ஒன்றாக இணைந்தே

  ஏற்றதோர் தன்மையில்
உயிர்காக்கும் பணியும் நடத்துகின்றார்

💧அன்னையின் மனமும் பதறுகிறது

💧ஆர்வலர்கள் ஆன்றோர்கள் அனைவர் வேண்டுதல்

💧 அவனது உயிருக்குப் பாதுகாப்பு வலையமாகுமே

💧 ஆழ்துளைத் தண்ணீர் துளிகள் தேடிய கண்ணீர் துளிகள்

💧பாழ்பட்டுக் கிடக்கும்
நிலைமாறி ஆழ்குழாய்
நீர்வளம் மாற்றம் 

💧வீழ்கின்றமழை நீர்வளமும்

நிலமெங்கும் சேமிக்கும் பழக்கமாக்கணுமே

💧 நிலநீர்வளம் நிறைவாகும்  பாதுகாப்பு வலையமாகவே

💧 மூடிபோட்டுக் காக்கும்  வளங்கள் நாடெங்கும் நிலைக்கட்டும்

💧 பெருகிவரும் தண்ணீர் துளிகள் தேடும்  பணியும்

💧 நல்லதோர்  வளமும்  கண்ணீர்த் துளிகள்  கரையாமல் பாதுகாக்கனுமே

💧எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்

💧நல்லதோர் நிலையில்  சிறுவன் சுர்சித் வில்சனும்

💧பல்லாண்டு வாழவும்உயிருடன் மீளவும் வேண்டுமே

💧💧💦💧💦💧💦💧
கவிஞர் மு க  பரமசிவம்
பேரையூர் மதுரை
💧💧💦💧💦💧💦💧