Header Ads Widget

Responsive Advertisement

ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்



*எனதருமை ஆசிரியப் பேரினமே*

மாதா பிதா கடந்து குருவாக வந்து நின்று தெய்வச்செயல் புரிந்து இருளதை அகற்றுதற்கு நீயின்றி யாரிங்குண்டு. 

நல்லதை நல்லதென்றும்
அல்லதை அல்லதென்றும்
அகிலமெங்கும் உரக்கச் சொல்லும்
வல்லவன் நீ தான் என்றும்.

உன் குறை சொல்லி நிற்பார்
உன்னையே பழித்து நிற்பார்
உன் நிறை அறியாதோர்கள்
உணரவும் மாட்டார் என்றும்.

கல்லிலே கயிறைத் திரித்து
மண்ணிலே மாளிகை கட்டும்
வித்தைகள் தெரிந்தவன் நீ
வித்தகன் என்றுமே நீ.

சிலைவடிக்கும் சிற்பியும் நீ
கலை வளர்க்கும் கலைஞனும் நீ
அறிவூட்டும் அறிஞனும் நீ
அவனியிலே சிறந்தவன் நீ.

உன்னையே நீ அறிவாய் 
உன் திறன் நீ அறிவாய்
உன் மன நிம்மதி தான்
உயர்ந்ததோர் விருதுணர்வாய்.

காலமது ஒரு நாள் மாறும்
கற்றவர்கள் நிலையும் மாறும்
உயர்ந்தவன் ஆசிரியன் புரியும்
அந்த நாள் விரைவில் மலரும்
அந்த நாள் விரைவில் மலரும்.

*இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்.*

*சுலீ. அனில் குமார்.*