Header Ads Widget

Responsive Advertisement

மனிதனும் தெய்வமாகலாம் ...



மனிதராய்ப் பிறந்தார் ....  
மாதவம் செய்தார்  .. 
துன்பத்தின் காரணம்....
ஆசையே .... ..என்றார் ....
மெய்யறிவு பெற்றார் ...
தெய்வமுமானார் ...புத்தர். 

களைந்தனர் ....மனிதர் துயர் ..
முண்டக்கண்ணி ..முனீஸ்வரன் ..
முப்பாத்தம்மன் ..சுடலைமாடன் ..
எத்தனையோ மனிதர்கள் ...
தெய்வங்களானார்கள்..

பிறர் துயர்க் கண்டு ....
கசியும் கண்ணீர்த் துளி...
யார் துயர்க் கண்டும் ..
வாடுகின்ற மனம் ....
ஆதரவும் அற்ற போது ...
உதவ நீளும் கரங்கள் ....
இடர் ஒன்று.. கொண்டபோது ...
உதவிடும் நெஞ்சங்கள் ...
தெய்வங்களாய்...மண்ணிலே ...

கோபங்கள் நீக்கி...
குறை காணல் போக்கி ...
நிலையாமை  மனதில்  ஏந்தி ....
அமைதி கொண்டு வாழ்ந்தால் ...
மனிதனும் தெய்வமாகலாம் ...
மனிதனும் தெய்வமாகலாம் ...

          தெய்வானை,
               மீஞ்சூர்.