Header Ads Widget

Responsive Advertisement

நீர்க்குமிழி


ஓடி ஓடித்தான் உழைத்தார்

ஆடி ஆடித்தான் களித்தார்

வாரி வாரித்தான் சேர்த்தார்

நாடி வந்தவரையோ பழித்தார்.


தனம் பெருகிப் போனதால்

மனம் சுருங்கிப் போனது

பணம் பெருகிப் போனதால்

குணம் அருகிப் போனது.


அள்ளி அள்ளித் தின்றாலும்

அளவோடு தான் தீனி

ஒரு சாண் வயிற்றுக்கு மேல்

ஏது போணி.


மருத்துவமனை சென்றுவிடும் சேர்த்ததிலே பாதி

பங்கு போட்டுக் கொண்டு செலவார்

மக்களெல்லாம் மீதி.


இறுதியில் மிஞ்சுவதோ ஒருபிடிச்சாம்பல்

உணராது ஓடுவதோ மனிதர்களின் கும்பல்.


நீர்க்குமிழி தான் வாழ்க்கை

உணரவில்லை யாக்கை

நிலையின்மை புரியாததோ

என்றும் வேடிக்கை. 


*சுலீ. அனில் குமார்*