Header Ads Widget

Responsive Advertisement

கப்பலோட்டிய தமிழன்.பிறந்ததினம்



(செப்டம்பர் 5, வ உ சி பிறந்ததினம்)

முத்துநகர் தந்ததோர் முத்து
ஆனது தமிழகத்தின் சொத்து
ஆங்கிலேயனிடம் காட்டினான் அவன் கெத்து 
பாரதத்தின் தன்மானம் காத்து.

உனக்கேது திறமையென்றான் பரங்கி
பாரடா எம் திறமையை என்று முழங்கி
ஓடவிட்டான் கப்பல்கள் இரண்டு
நின்றுவிட்டான் வெள்ளையனோ அரண்டு.

கவர்ந்தான் தன் பேச்சாலே மனதை
அடைந்தான் தன் உழைப்பாலே உயர்வை
அவன் இரத்தமோ ஆனது வியர்வை
கடைசியில் ஆனான் சிறைப் பறவை.

கல்லுடைத்தும் உடையவில்லை இதயம்
செக்கிழுத்தும் தளரவில்லை உள்ளம்
சொத்திழந்தும் கரையவில்லை வீம்பு 
பாரதியின் பாடல் தான் அவன் தெம்பு.

நாட்டிற்காய் சொத்திழந்த
சுகமிழந்த தியாகம்
வாழ்விழந்து வறுமையிலே உழன்றது தான் சோகம்
நலம் குறைந்த நிலையில் கூட
சுதந்திரம் தான் மோகம்
இறக்கும் வரை தணியவில்லை அவன் சுதந்திர தாகம்.

மறக்கமுடியவில்லை அவன் செய்த தியாகம்
உந்துதலை அளிக்கிறது அவன் காட்டிய வேகம்
நிலைத்து நிற்கும் யுகயுகங்கள்
அவனது நாமம்.

கப்பலோட்டிய தமிழனென்றும்
தென்னாட்டுத் திலகரென்றும்
செக்கிழுத்த செம்மலென்றும் சொல்லப்படும் நாமம்
எங்கள் வ உ சி யின் நாமம்.

*சுலீ. அனில் குமார்.*