அன்பொன்றையே ஆயுதமாய் கொண்டு
ஆசிரியர் தொழிலை ஆர்வமாய் ஏற்று
இனிமையாய் பாடம் நடத்தி
ஈதலுடன் வாழ்ந்தார்
உண்மையை மாணவர்களுக்கு சொல்லி
ஊக்கமாய் படிக்கச் செய்து
என் பிறந்த நாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாடுங்கள் என்று சொல்லி
ஏற்றம் ஒன்றையே மனதில் ஏந்தி
ஐயமின்றி கற்கச் செய்து
ஒற்றுமையை வலியுறுத்தி
ஓங்கிய புகழுடன் வாழ்ந்தார்
தி.பத்மாசினி சுந்தரராமன்