எத்தனை மக்களைப் பார்திருப்பேன்?
எத்தனை வேடங்கள் ஏற்றிருப்பேன்?
முகவாயிலின் வண்ணத்தோரணம்
முப்பொழுதுக்குள் மாறிவரும்!
மதத்தினடிப்படையில் மாறுபடும்!
உள் அலங்காரம் நாளைக்கொன்றாய்
என்னை அழகு கூடாரமாக்கிவிடும்!
உணர்வுப்பூர்வமான நிகழ்வுகள்....
எனக்குள் நிரந்தரமாய் பதிந்துவிடும்!
ஓடியாடும் பிள்ளைகள் கூட்டம்
பட்டாம்பூச்சியாய் மகிழ்வையூட்டும்!
பதின்ம வயதுகள் ........ உடையலங்காரத்தில் வியப்பைகாட்டும்
கண்களுக்குள் காதல் பரிமாற்றம்!
கணப்பொழுதில் வேதியல் மாற்றம்
நடத்தியே அழகூட்டும்!
கல்யாணக்கனவுகளை அரங்கேற்றும்!
பெற்றவர்மனதில் பதியும் நிச்சயதார்த்தம்!
கண்ணீரின் வகைகளை நான்
தரம் பிரித்து அறிந்ததும்.......
இவ்விடத்தில்....... என்னிடத்திலே!
காலடித்தடம் தேய கன்னிகைக்கு
வரன்தேடி மேடையிலே மணமுடிக்கும்
பெற்றோரின் நிம்மதிக் கண்ணீர்!
வாங்கிய கடனின் நிழல்
தேங்கியே பின் நிற்க......
தேம்பும் மகளை தேற்றும் தந்தை!
புதுஉறவுகளைக்கண்ட மிரட்சியை
பதமாய் நெஞ்சில் மறைத்து
பெருகும் கண்ணீர் மறைக்கும் உற்றார்!
பிரிவின் துன்பம் தோற்றுவிக்கும்
வெற்றிடத்தை கண்ணீரால்
நிரப்பும் நட்பூக்கள்!
சிலநேரம் மணம் நின்றதால்
திக்கற்றுநிற்கும் கூட்டம் !
அசுப செய்தி கேட்டு திடுக்கிட்டு
அழகிய சிரிப்பால் கண்ணீர் மறைத்து
காரியமாற்றும் உறவுச்சுற்றம் !மேளவாத்தியம் என்னில் எதிரொலிக்குக்கும் நேரங்கள் .....! மெல்லிசைக்கச்சேரிகள்
அதிர்வலைகளை பதிவிடும் நேரங்கள்!
இப்படியான உணர்வின் சங்கமங்கள்!
என்னுள் சுமந்தே மௌனமாய்
நிற்கிறேன்! அடுத்த நிகழ்வு வந்து
எந்தன் துயில்கலைக்கும் வரை!
🌹🌹வத்சலா🌹🌹