வெட்டிய நகத்தை மேகத்தில்
ஒட்டி விட்டது யாரோ?
தட்டிப்பறிக்கும் அழகினிலே
தாகம் தணிப்பது யாரோ?
ஒட்டி உறவாடும் மின்னலை
கட்டிப்போட்டு களவாடியது யாரோ?
முட்டிமோதிய வேகத்தில்
கண்ணீர் மழையைப் பொழிவதும் யாரோ?
தட்டுத்தடுமாறும் பாதங்களை
தடாக மலரென வர்ணிப்பதும் யாரோ?
கொட்டும்முரசாய் கொள்கையுடன் வலம்வரும்
எட்டுத்திக்கும் எழில்மறையாய்ப் பூத்து
இதயத்தைக் காக்கும் சுகமான தமிழ்தானே!
பௌர்ணமி நிலவுக்கு பாதபூசை செய்ய
போட்டிப் போடும் பொறுப்பாளன் நானே!
வாழ்க எம் தமிழ்!