சாதி மத பேதமின்றி
மத நல்லிணக்கம் இங்கே ஆரம்பமாகிறது
ஏழையென்றும் பணக்காரனென்றும் பேதமின்றி ஒன்று கூடி நட்போடு நாளும் உறவாடும் கூடம் அது தான் பள்ளிக்கூடம்
மனதின் இருளைப் போக்க ஆன்மீககூடம்
அறியாமை என்னும்இருளை அகற்ற பள்ளிக்கூடம்
எண்ணையும் எழுத்தையும் கற்பித்து
வாழ்வில் ஏற்றம் பெறத் தூண்டுவதும்
கல்வியென்னும் ஞானக்கண்ணை அளிப்பதும் பள்ளிக்கூடம்
குதூகலத்திற்கும்
திறமைகளை வெளிப்படுத்துவதற்கும்
தன்னைத்தானே அறிந்து கொள்ளவும்
சமூகத்தில் பழகும் போக்கையும் கற்பிப்பதும் பள்ளிக்கூடம்
பள்ளியில்லை ஊரும்
ஆறில்லா ஊரும் நாறும்
பள்ளியைப் போற்றி
படிப்பை ஏற்றி
படிப்பினையை கற்போம்
தி.பத்மாசினி சுந்தரராமன்