சாத்தியமே இல்லையென்று சத்தியமாய்ச் சொன்னார்கள்
மனமிருந்ததால் உயர்ந்ததன்று
பெருவுடையார் கோவில்.
மாமலையும் மடுவுமாக எடுத்துக் காட்டு சொன்னார்கள்
மனமிருந்ததால் மலர்ந்ததன்று
மராட்டிய சாம்ராஜ்யம்.
ஐந்து நூறு வீரரென்று ஏளனமாய்ப் பார்த்தார்கள்
மனமிருந்ததால் உதித்ததன்று
ஆங்கிலேயர் ஆட்சி.
கத்தியின்றி இரத்தமின்றி
யுத்தத்தின் திசைமாற்றி
மனமிருந்ததால் கிடைத்ததன்று பார் வியக்கும் சுதந்திரம்.
கனவிலும் முடியாதென்ற பதில் பெற்றார் காமராசர்
மனமிருந்ததால் மலைகளிடை வந்தது மாத்தூர் பாலம்,
மாத்தூர் தொட்டிப் பாலம்.
மனம் திறந்தால் தீர்வு உண்டு,
மனம் தளர்ந்தால் தோல்வி உண்டு,
மனமிருந்தால் வழியுமுண்டு
இதை உணர்ந்தால்...
இதை உணர்ந்தால் பெருமை உண்டு.
*சுலீ. அனில் குமார்*