கை வளையல்களில்
புதுவித டிசைன்களை
தேடினாள்!
பல மணித்துளிகளாய்..!
–
நெற்றிப்பொட்டு
பளிச்சென இருக்க
அலசினாள்
சில நாழிகைகளாய்!
–
காதணியும் கழுத்தணியும்
அணிந்து பார்த்து
வாங்கினாள்
அரை நாட்களாய்!
–
புது ரக சேலையை
தேர்வு செய்ய
கடைகளில்
தேடினாள், நாள் முழுக்க..
–
காலம் பூரா
வாழப்போகும்
ஆண் மகனை மட்டும்
பார்த்த நொடியில்
தேர்ந்தெடுத்தாள்
காதல் என்ற பெயரில்!
–
————————-
மல்லிகா ராம்