அருவிக் கரையில் ஓர் குருவிக் கூடு
அருமையாய் குருவி கட்டிய கூடு
சிறிதாய் அழகாய் இருந்த ஒரு கூடு
சிறு குருவிக் குடும்பத்திற்களவான வீடு.
அருகிலோர் மாளிகை ஆடம்பர மாளிகை
அலங்காரப் பதுமை போல்
தெரிந்ததம் மாளிகை
ஆர்ப்பாட்டம் காட்டவே கட்டிய மாளிகை
ஆளோ அரவமோ இல்லாத மாளிகை.
குருவியின் கூடதோ சொன்னதொரு பாடம்
எதற்கென்று தெரியாமல் கட்டுகிறாய் மாடம்
ஏன் தான் தேவை உனக்கிந்த வேடம்
போதாதோ உனக்கும் சிறிதாய் ஒரு கூடம்.
எலிவளை என்றாலும் தனிவளை வேண்டும்,
எதிர் வந்து நிற்போர்கள் இகழாமல் வேண்டும்,
உண்ணவும் உறங்கவும் இடமதில் வேண்டும்,
இவையன்றிக் கூட்டினில் வேறென்ன வேண்டும்.
இதைத்தானே மனிதன் உணர்ந்திட வேண்டும்.
*சுலீ. அனில் குமார்*
*கே எல் கே கும்முடிப்பூண்டி.*