Header Ads Widget

Responsive Advertisement

கதறல்



நான்கு பக்கம் மோதுகின்ற நீரெங்கே?
காற்றோடு தழுவி நீர்வரையும் கோலங்கள் எங்கே?
நிரம்பிய நீருக்குள் துள்ளி விளையாடிய கயல்களெல்லாம் எங்கே?
கயல்களைக் கொத்திடவே ஒற்றைக்காலில் தவங்கிடக்கும் நெட்டைக் கொக்குகளெங்கே?
நீர்மீது படர்ந்திருந்ந வட்டவட்ட தாமரை
இலைகளெங்கே?மலர்களெங்கே?
அம்மலர்களில் தேன்பருக வருகின்ற வண்டினங்கள் எங்கே?
நீருக்குள் மூழ்கி நீச்சலடிக்க வருகின்ற சிறுவர்களெங்கே?
விடியலிலே என்னிடத்தில் நீராடவருகின்ற பெண்களெங்கே?
அப்பெண்களோடு வருகின்ற குழந்தைகளெங்கே?
வேறுபக்கம் தனியாகக் குளியல்போட வருகின்ற ஆண்களெங்கே?
துணிதுவைக்கும் மாந்தரெங்கே?
நான்குபக்கங்களிலும்
காற்றுவாங்க வருகின்ற கூட்டமெங்கே?
என்னோடு கலந்துறவாடிடவே
தவழ்ந்து வரும் தென்றலெங்கே?
எங்கே?எங்கே?எங்கே?
நீரென்ற ஒன்றில்லாத காரணத்தால் நானின்று வாடிவிட்டேன்!
வற்றிவிட்டேன்!,
வறண்ட பள்ளமாகி விட்டேன்!
இனி நானென்று நிரம்புவேன் மறுபடியும் நீராலே!
வானமே பொழியாதா?
என்மேனி நனையாதா?
குளம் நான் நிரம்புவேனா?
கதறுகிறேன்.........நானே!

த.ஹே
கோளூர்