Header Ads Widget

Responsive Advertisement

சொல்லாமலே

திருவள்ளுவர் தன் அரிய கருத்துகளை சொல்லாமலே
இருந்திருந்தால்
நமக்கு நல்ல குறள் கிடைத்திருக்குமா?

தொல்காப்பியர் தன் எண்ணங்களை சொல்லாமலே இருந்திருந்தால்
நல்ல இலக்கணம் கிடைத்திருக்குமா?

எட்டப்பன் அந்நியரிடம் வீரபாண்டிய கட்ட பொம்மன் இருக்கும் இடத்தை சொல்லாமலே இருந்திருந்தால்
அவர் உயிர் பிழைத்திருக்குமே

குந்தி தேவியார் கர்ணணை பாண்டவரிடம் உங்கள் உடன் பிறந்தோன் என்று சொல்லாமலே
போனதால்
அவர்களுக்குள் பகை மூண்டது

நாமும் பலவற்றை சொல்லாமலே விட்டு விட்டால்
எல்லாவற்றிலும் நன்மை பயக்கும்

தி.பத்மாசினி