Header Ads Widget

Responsive Advertisement

நூலாம்படை காலம்

பால் குடி மறவா 

கைக்குழந்தையாய்

அடம் பிடித்தழுகிறது

மனம்


நீயோ

திமிராய்க்

கடந்து போகிறாய்

நாத்தனாராய்


நூலாம்படை

படர்ந்த 

பூர்வீக வீடாய்க்கிடக்கிறது

என் காலம் 


*பொன்.இரவீந்திரன்*