Header Ads Widget

Responsive Advertisement

காடு செழித்தால் நாடு செழிக்கும்

கானகமே வீடாக
குழந்தைகளே உலகமாய்
தினம் தினம் பயமே
வாழ்க்கையென்று
பல உயிர்கள் சிறிதென்றும் பெரிதென்றும்
வாழ்கின்றன
ஒவ்வொன்றிற்கும் பலவாறாய் சக்தி கொடுத்தவன்
சிலவற்றை பலகீனப்படுத்தி விட்டான்

சிலவற்றின் உயிரினமே
மாக்களிலும் மக்களாலும் அழிக்கப்பட்டு விட்டன

மனிதன் காட்டை எட்டா வரையில் செழித்திருந்தது

எட்டும் போது அழிந்திருக்கிறது

மனிதன்
காட்டை கூறு போடாமல் குறுக்கிடாமல்
இருந்தாலே
தாவரங்களும் உயிரினங்களும் செழித்திருக்கும்

காடு  செழித்தால்
நாடு செழிக்கும்
நாடு செழித்தால்
மக்களின் வாழ்வு செழிக்கும்

இறைவன்
சிலவற்றை அழகாய் படைத்தும்
ருசியாய் படைத்தும் விட்டான்

சில அழகுக்காக அடிக்கப்படுகின்றன
பல ருசிக்காக துரத்தப் படுகின்றன

துரத்தப் படுவதும்
விரட்டப்படுவதும்
எதற்காக இருந்தாலும்
பெண்ணினமும்
மானினமும் ஒன்று
தன்னை காத்துக் கொள்ள எவ்வளவு போராட வேண்டியிருக்கிறது

மரங்களை வைப்போம்
மழையைப் பெருக்குவோம்
காடுகளை வளர்ப்போம்
அங்குள்ள உயிர்களை பாதுகாப்போம்

தி.பத்மாசினி