Header Ads Widget

Responsive Advertisement

காணும் பொங்கல்



தமிழனின் பரந்த மனப்பான்மைக்கு
நல்ல சான்றாகும்
காணும் பொங்கல்!
விழியென்ற வாசலே உறவென்ற பாலம் அமைக்கும்!
ஞாயிறுதனக்கும்
மாடுகன்றுகட்கும்
அடுத்தடுத்து நன்றி
தெரிவித்த மகிழ்வோடு மூன்றாம்நாள் பயணத்திருவிழாதான்!
சொந்தபந்தங்களைத்
தேடிச்சென்று முகங்கண்டு மகிழ்வோம்!மூத்தவராயின் பாதம்பணிந்து ஆசிபெறுவோம்!இளையோரெனில் வாழ்த்துரைப்போம்!
குழந்தைகளை வெளியே கூட்டிச் செல்வோம்!மானிடச் சமுத்திரம் பாரடா!நீஅதன் ஒருதுளி தானடா!என்ற பாரதிதாசனின் வரிகளை உணரவைப்போம்!
நட்பை அன்பை உறவை வளர்க்கவே காணும்பொங்கல்
என்று முறைவைத்துக் கொண்டாடிய தமிழனுக்கு எங்கும் எதிலும் வெற்றியே!

த.ஹேமாவதி
கோளூர்