Header Ads Widget

Responsive Advertisement

இரட்டைக்கிளவி

சடசடவென பெய்த மழையில்

மடமடவென முளைத்தன குடைக் காளான்கள்

தபதபவென்று ஓடி சிலர் சாலையோர கடைகளில் நின்றனர்

குடுகுடுவென்று ஓடி சிறுவர்கள் மழையில்

ஆனந்தக் கூத்தாடினார்கள்

சலசலவென தண்ணீர் சாலையில் ஆறாய் பெருக்கெடுத்தது

விறுவிறுவென்று நிலமகள் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டால்

அதைக்கண்ட மகிழ்ச்சியில் மழை டக்டக்கென்று நின்றுவிட்டது


தி.பத்மாசினி