Header Ads Widget

Responsive Advertisement

முரண்


வறுமையில் வாடும் மக்களின்

பசியாற்ற யோசிக்கும் நாம்

குப்பையில் கொட்டுகிறோம் உணவை


பிச்சை எடுப்போருக்கு தானம் 

செய்ய யோசிக்கும் நாம்

உணவகத்தில் வைப்பதோ டிப்ஸ்



உழைக்கும் மக்களுக்கு அதிக ஊதியம்

தர மறுக்கும் முதலாளிகள்

சுயத்துக்காக தருவதோ கோடிகள்



சாலையில் விற்கும் வியாபாரியிடம்

பேரம் பேசும் நாம்

மால்களில்  பேசாமல் வாங்குகிறோம்



வீதியில் விற்பதால் தரமற்றதுமல்ல

கடைகளில் விற்பதால் உயர்ந்ததுமல்ல

அங்கே தான் பாதுகாக்க

மருந்துகள் போடப்படும்



ஒருவனுக்கு உணவில்லை யெனில்

ஜகத்தினை அழித்தி டுவோம்

இப்போதோ

உணவுதரும் விவசாயிகளுக்கே உணவில்லை



முரண்களை  களைவோம்

அரண்களை அமைப்போம்

ஏழைகளை நேசிப்போம்


தி.பத்மாசினி