வறுமையில் வாடும் மக்களின்
பசியாற்ற யோசிக்கும் நாம்
குப்பையில் கொட்டுகிறோம் உணவை
பிச்சை எடுப்போருக்கு தானம்
செய்ய யோசிக்கும் நாம்
உணவகத்தில் வைப்பதோ டிப்ஸ்
உழைக்கும் மக்களுக்கு அதிக ஊதியம்
தர மறுக்கும் முதலாளிகள்
சுயத்துக்காக தருவதோ கோடிகள்
சாலையில் விற்கும் வியாபாரியிடம்
பேரம் பேசும் நாம்
மால்களில் பேசாமல் வாங்குகிறோம்
வீதியில் விற்பதால் தரமற்றதுமல்ல
கடைகளில் விற்பதால் உயர்ந்ததுமல்ல
அங்கே தான் பாதுகாக்க
மருந்துகள் போடப்படும்
ஒருவனுக்கு உணவில்லை யெனில்
ஜகத்தினை அழித்தி டுவோம்
இப்போதோ
உணவுதரும் விவசாயிகளுக்கே உணவில்லை
முரண்களை களைவோம்
அரண்களை அமைப்போம்
ஏழைகளை நேசிப்போம்
தி.பத்மாசினி