துள்ளி கயல் நீந்துகின்ற தடாக குளத்தினிலே
வெள்ளை முல்லைபூ போலே வளர்ந்திருக்கும் தாமரையே,,,,
கண்டுகொண்ட கலைமகளும் உன் மேலே தவம் புரிந்து
கல்விக்
கண்ணை கொடுத்ததினால்
சரஸ்வதி என்றானாள்,,,,
உன்னழகில் மயங்கி நின்று,
தன் செவ்வழகில் சரிபாதி,,,
தந்து விட்ட மலைமகளும் செல்வத்தோடு நின்று கொண்டாள்,,,,
ஒன்றிருக்க
ஒன்று இல்லை என்று நம்மை
ஆள வைத்து
வீணாக மனிதினிலே சேர்த்து வைக்க முடியவில்லை,,,
வெண்தாமரை இருக்கையிலே செந்தாமரை மறைந்து விடும்,,,
செந்தாமரை மலர்ந்து விட
வெண்தாமரைக் கிடமேது,,,,,
சேர்ந்திருக்க காத்து நின்றேன்,,,
ஒருத்தி,
சேர வழியில்லை என்றாள்,,,
அவளிருக்க நானெதற்கு?
நானிருந்தால் அவளெதற்கு,,,?
இருவரும் இருந்து விட்டால்
இயங்கிடுமா
உலகம் என்றாள்,,,
பாதி வழி கடந்து விட்டேன்,,,
சேர்ந்து,
பார்க்க இன்னும் முடியலையே,,,
செல்வம்,
தேடி
வருகையிலே
ஞானம் ஓடி மறையுதடி,,,
ஞானம் தேடி வருகையிலே
வந்த செல்வம் செல்லுதடி,,,,,
பாலா