பழகியகிளி
பறந்து மறந்துபோனது
சோதிடம்

_____


தண்ணீரை ஊற்றுகிறேன்
பாதங்களைத் தழுவியபடி
செடியின் நிழல்.

எந்த பறவையின் எச்சமோ.!
பிடுங்கி எறிகையில்
சிதிலமடைகிறது பள்ளி.

____

1.ஒற்றையடிப்பாதையில் பயணம்
   அழகாகவே இருக்கிறது
   இடையிடையே குறுக்கீடும் பட்டாம்பூச்சி ....!

2.வானில் மேகம்
   கண்ணீர் வடிக்கிறது
   குடிசையில் ஓட்டை...!

3.பெய்யும் மழையில்
    பூமி நனைகிறது
   வானின் கைம்மாறு ...!

4.காட்டுவழிப் பயணம்
   சுகமாகவே இருக்கிறது
   வீசும் குளிர்ந்த காற்று....!

5.புத்தகத்தில் மயிலிறகு
   அவ்வப்போது எட்டிப்பார்க்கிறது
   தொலைந்த பால்யம் ....!