Header Ads Widget

Responsive Advertisement

அன்பு - சுகந்தீனா



அன்பென்ற
ஒற்றை
சொல்லே
உலகின்
ஒட்டுமொத்த
அசைவிற்கும்
காரணம்

அன்பின்
ஆழங்கள்
கவிதைகள்
ஆகலாம்

கவிதைகள்
கனவுகள்
ஆகலாம்

கனவுகள்
கவிதைகளும்
ஆகலாம்

கனவுக்
கவிதைகள்
யாவும்
கடலையும்
கடக்கலாம்

கண் சிமிட்டும்
நேரத்தில்
கண்டமும்
தாண்டலாம்

அந்த
அன்பென்ற
ஒற்றை சொல்
களங்கமில்லா
கவிதைகளாக
தொடரும் வரை

காலங்கள்
காவியமாய்
கரைந்தோடும்

காவியங்களும்
இலக்கியங்களாய்
புனையப்பட்டு
பாதுகாக்கப்படும்

அன்பென்ற
ஒற்றை
சொல்லே
உலகின்
ஒட்டுமொத்த
உயிர்களின்
ஏக்கம்..!

அன்றும்
இன்றும்
என்றென்றும்...

✍️கவிரசிகை......
         .......சுகந்தீனா