Header Ads Widget

Responsive Advertisement

நான் அருவி, நீ பேரன்பின் வீடு

கண்மாய்களின்
மடைகளிலோ
வயல்களின்
வாமடைகளிலோ
அடைபடாத அன்பின்
அருவி நான்...!

அக்னிநட்சத்திர
வெயிலிலும்
எனைக்குளிர்வித்து
உறங்கவைக்கும்
சம்பை வேய்ந்த
பேரன்பின்
வீடு நீ....!
எல்லாந்தாண்டி
இனியென்னடி வேண்டும் செல்லம்மா...?
சம்மாநெல்லாய்
உந்தன் மடியில் நான் சாய்ந்திட...!!
*பொன்.இரவீந்திரன்*