கண்மாய்களின்
மடைகளிலோ
வயல்களின்
வாமடைகளிலோ
அடைபடாத அன்பின்
அருவி நான்...!
அக்னிநட்சத்திர
வெயிலிலும்
எனைக்குளிர்வித்து
உறங்கவைக்கும்
சம்பை வேய்ந்த
பேரன்பின்
வீடு நீ....!
எல்லாந்தாண்டி
இனியென்னடி வேண்டும் செல்லம்மா...?
சம்மாநெல்லாய்
உந்தன் மடியில் நான் சாய்ந்திட...!!
*பொன்.இரவீந்திரன்*