மூத்த மொழி என்று சொல்லும் அத்துணை மொழிகளுக்கும்
வாசலாக முன்னிருந்து
நுழைய விட்ட செம்மொழி.
வல்லினமும் மெல்லினமும் இடையினமும் இணைந்திருந்து
இனிமையினை எடுத்துரைத்து
நிமிர்ந்து நின்ற தமிழ் மொழி.
அம்மொழியைப் படித்துவிட்டு
அதனழகை வியந்து விட்டு
அதன் பெருமை உணர்ந்து விட்டு
அடியெடுத்து வைத்திடு.
உள்ளுக்குள் வந்துவிட்டால்
உணர்வுக்குள் ஒன்றிவிட்டால்
வெளியேறும் எண்ணமெல்லாம்
வழிமாறும் உணர்ந்திடு.
பூட்டிவைக்கும் எண்ணமில்லை
திறந்து செல்லத் தடையுமில்லை
துறந்து செல்ல முடியுமென்றால்
மறந்து விட்டுச் சென்றிடு.
தாயென்ற புரிதலுடன்
தயை வேண்டி வருவதென்றால்
அரவணைக்கத் திறந்திருக்கும்
கதவு என்றும் அறிந்திடு.
*கிராத்தூரான்*
*சுலீ. அனில் குமார்*