நெருங்கிய உறவு கூட
தூரத்தில் உறவாக
இணைபிரியா நட்பு கூட
தொலைவினிலே நட்பாக.
ஒன்றாக அமர்ந்ததும்
கதை பேசி மகிழ்ந்ததும்
கதையாக மாறிவிட்ட
கலிகால நிகழ்வாக.
நேரம் போக்க படம் பார்த்து
நிறைய பேரைத் தினம் பார்த்து
அளவளாவி மகிழ்ந்ததெல்லாம்
அன்றொருநாள் என்பதாக.
வந்தோரை வரவேற்பதும்
விருந்தோம்பலால் மகிழ்விப்பதும்
உறவினர்கள் வீடு சென்று
உவந்திருப்பதும் நினைவாக.
அலைபேசியும் தொலைக்காட்சியும்
அதிக நேரம் எடுத்துவிட
பேச்சு கூட இல்லாமல்
தவிப்பாகத் தனிமை.
நோய் தவிர்க்க இருக்கின்ற
பொதுவெளியில் இடைவெளி
மனநோயை உருவாக்கும்
கொடுமையாம் தனிமை.
தனிமை இன்று இனிமையல்ல
தவிப்பவர்கள் கொஞ்சமல்ல
அனைவருமே கேட்கின்ற
ஒரே ஒரு கேள்வி......
அனைவருமே கேட்கின்ற
ஒரே ஒரு கேள்வி
என்று தணியும் தனிமை.
*கிராத்தூரான்*