Header Ads Widget

Responsive Advertisement

அகர வரிசையாய் அம்பேத்கர்



# அடக்குமுறைக்கு ஆட்பட்ட சமூகத்தில் சிப்பிக்குள் முத்தாய்!

# ஆதிக்க சமுகத்தினருக்கு எதிராக ஆத்திரம் கொள்ளாமல் ஆர்பரிக்கும் அறிவாற்றலாய்!

# இடஒதுக்கீடு என்னும் சமத்துவத்தை சமரசமில்லாமல் வித்திட்டவராய்!

# ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் என தொடங்கும் குறளுக்கு இலக்கணமாய்!

# உரிமை போராடங்களில் வெற்றி திருமகனாக வலம் வந்தவராய்!

#  ஊக்கமுடைமையின் அடையாளமாக உச்சம் தொட்டவராய்!

#  எக்காலத்திலும் இந்தியாவின் தவிர்கயியலாத ஆளுமையாய்!

#  ஏளனங்கள், அவமானங்களை புறம்தள்ளி முனைவர், பாரிஸ்டர் பட்டங்களை பெற்றவராய்!

#  ஐ-தலைவன், தந்தை. ஆம் தன்னிகரற்ற தலைவனாக, இந்திய அரசியலமைப்பின் தந்தையாக, தன்னை பரினமித்தவராய்!

# ஒப்பற்ற இந்திய அரசியலமைப்பால் ஒற்றுமையில் வேற்றுமையைக் களைந்தவராய்!

#  ஓங்கி, உயர்ந்த புகழின் உச்சத்திலும் அடக்கம், அமைதி, அகிம்சை, வழி நின்றவராய்!

#  ஔவை என்ற தமிழ்மகளும் தலை வணங்குவாள், உன் வாழ்நாள் சாதனையை கண்டவராய்!

#  ஃ -தமிழில் ஆயுத எழுத்து, தனிநிலையாம். ஆம் உலக தலைவர்களுள் தனிநிலையாய்,ஆயுத எழுத்தாய் அம்பேத்கர்!

 **அம்பேத்கர்,* 
 *சாதித்த தலைவர்!* 
 *சாதிய தலைவரல்ல* . 

 *_புரிதலுக்குட்பட்டு
_அறிவோம்
_அம்பேத்காரியம்

இவண்
புரிதலுக்காக, 
சொ.சத்தியன்