Header Ads Widget

Responsive Advertisement

போதும் காத்திருந்தது - பாலா



வான் நிலவு போல நீயும் வந்தாலென்ன,,,!
தேன் கொண்ட கனிகளைப் போல ரகசியம் சொன்னாலென்ன,,,!
ஆழ்கடலில் அமைதியை
வைத்து,
அலையாகி கரையினில் மோத 
யார் வரவைத் தேடுகிறாய்
வாய் திறந்து நீயும் சொல்லு,,,,!

சொல்லாத சொல்லுக்கு
மெளனம் தான் விலையாகும்,,,
மெளனத்தில் நீ இருக்க
காலம் தான் பகையாகும்,,,
இல்லாததொன்று இருப்பது போல் கனவாகும்,,,
இருந்தும், 
சொல்லாமல் போனால் என் வாழ்வும் என்னாகும்!?

மருங்கிலா நங்கையென மாற்றுரு தங்கமென
முறை சொல்லி நானழைக்கு முடிச்சு போட காத்திருக்கேன்,,,
எழுந்து வா பேரழகி வளர்பிறையும் வழிவிடத்தான் வாணியாய் வர நீ
தமிழ் மாநிலமும் காத்திருக்கும்,,,!

ஒருங்கிலா உடலிரண்டு உயிர் மட்டும் ஒன்றாகி
கருங்கடலில் சேர்ந்தவர் போல் கனவில் நினைத்தாயோ!
பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோயென
மெளனமே சம்மதமாய், நீ மடிசார் புடவையுடன்,,,

அருகிலா நானிருக்கேன் 
அமைதி ஏன் பெருங்கடலே!
குறைவிலா முத்துக்களை கொடுப்பது தான் 
உன் குணமே!
ஒளிரும்,
மறைவிலா 
முகம் காண 
மனிதனாய் காத்திருக்கேன்!
குளிரும், வெண்ணிலவே
விலக்கி வா வெண்மேகம்!
போதும்
நான் காத்திருந்தது!

பாலா,,,