Header Ads Widget

Responsive Advertisement

போதும் காத்திருந்தது- ஹேமாவதி


இரவெல்லாம் துயிலாது எனக்கெனவே காத்திருந்தாயோ?
பட்டான சிவந்த உன்னிதழ்களைக் குவித்து மௌனத்திலாழ்ந்து
என்வரவுக்காய் இரவெல்லாம் காத்திருந்தாயோ?
நானில்லாத காரணத்தால் உன்னில்லம் நாடிவருவோரை உபசரிக்க இயலாமல் தவித்தாயோ?
என்னுயிர்க் காதலியே! கவலையை விடு!எனக்கென நீ காத்திருந்தது போதும்!
இதோ விடிந்து விட்டது! 
கதிரவன் நான் முளைத்தெழுந்து உன்னைத் தொட்டுத் தழுவிட வந்துவிட்டேன்!
இதழ்களை மலர்த்து!உன்னை நாடிவரும் தேனீக்களுக்கு தேன்விருந்து தந்து உபசரி!
இரவுவரும் வரை உன்னிடமே நானிருப்பேன்!
தாமரையே இப்போது மகிழ்ச்சியா?

த.ஹேமாவதி
கோளூர்