Header Ads Widget

Responsive Advertisement

நட்சத்திரம் - பாலா



தென்னம்பாளை மாவிலை தோரணம் பந்தலில் சேர்ந்து ஆட,,,
வைகை கரையில் வானொலி பாட்டும் ராகத்தோடு பாட,,,
மின்னல் போல உன் முகம் ஜொலிக்க கண்டேன் நானும் தங்கை,,,
அவள் அண்ணனைக் கண்டு தன்னை 
மறந்து ஒடி
வந்த மங்கை,,, (தென்னம்பாளை

கண்ணில் மின்னும் நட்சத்திரம் மன்னன் தந்ததோ!
மார்கழி மாத பனியும் அதில் குடியும் கொண்டதோ,,,!
விண்ணில் காணும் நவமணியெல்லாம்
தங்கை கழுத்திலே
நட்சத்திரமாய் ஜொலிக்குது இந்த அண்ணன் 
கண்ணிலே!
(தென்னம்பாளை,,,

வெள்ளை வண்ணத்தாமரை போல
உள்ளம் கொண்டவள்,,,
அவள்,
வேடிக்கை காட்டி அண்ணன் என்றும் சிரிக்க வைத்தவள்,,,
நல்லார் ஒருத்தி 
உளரே என்றால்
ஊரே சொல்லுமே ,,,
நயம் பட உரைக்கும் மக்கள் எல்லாம்
இவளே என்குமே!
(தென்னம்பாளை,,,

எல்லோர் முன்னும் மணமகளாக நடுவில் நிற்கின்றாள்,,,
கண்டதும், எங்கள்
அண்ணன் என்று பாசத்தை பொழிகின்றாள்,,,
அன்பும் பாசம் இரண்டையும் கலந்து கண்களை நனைக்கின்றாள்,,,
அவள், 
முறிந்த உறவை 
பிரியும் போது இணைத்து வைக்கின்றாள்! நட்சத்திரமாய் ஜொலித்து நிற்கின்றாள்,,,,!
(தென்னம்பாளை,,,

பாலா,,,