Header Ads Widget

Responsive Advertisement

பிரிதலும் பிரிதல் நிமித்தமும் பாலா

 
யார் போட்ட கோலத்தில் மார்கழி மகிழ்ந்தது,,,
நீ போட்ட கோலமே வாழ்வில் சிறந்தது,,,
பேரைச் சொல்லியே
நானும் இங்கே வாழ்ந்து வந்தேன் பாரு,,,
ஊரை விட்டு போகுமுன்னே சொன்னால் என்ன மாது!
இன்னும் உன்னையே காண ஏங்கி நின்று வந்த போது, 
அங்கே!
கண்ணீர் சிந்தியே
நிழலுங்கு கூட 
கரையக் கண்டேன் நானு,,,,

பூவில்லா நாரையிங்கு யார் பார்த்து மகிழுவார்,,,
தேரில்லா மன்னனை என்றும் வெறும் வாயால் மெள்ளுவார்,,,
நான் தேடும் பல்லவி
உன்னை யார் இங்கு சொல்லுவார்,,,
நானாக சொன்னால் கூட யார் என்னை அள்ளுவார்,,,,
ஊரெங்கும் தேடிப்பார்த்தேன் உன்னைப்போல இல்ல,,,
உன் முகம் போல காட்டி நானும் யாரிடமும் சொல்ல,,,,
விதி போட்ட சதியோ
நான்
வீதியில் செல்ல,,,,

வேள்விக்கு தீயை மூட்ட செங்கச் 
சூளையானது,,,
வேடிக்கையாக
என்னைப் பார்த்து வாழ்க்கை மாறி போனது,,,
அணைக்கும் கைகள் கண்களும் மூட 
ஏதோ இங்கு 
தேற்றுது,,,,
கண்ணீர் சிந்தி கண்களிரண்டும் 
தீயை
இங்கு அணைக்குது,,,
யாரைச் சொல்லி நானும் இங்கே வாழப்போறேன் பாவி,,,
உயிர்,
போகும் நேரம் கூட
உனது பேரை சொல்லும் எந்தன் ஆவி!

பிரிந்ததவர் சேரத்தான்
உறவைத் தந்தான் இறைவன்,
சேர்ந்தவர் பிரியக் கண்டும் மகிழ்ந்தே நின்றான்,,,
பிரிதலும்,
பிரிதல் நிமித்தமும் பொறுமை என்றான்,,,
போகிற போக்கிலே உன்னைப்போல் நானும் என்றான்,,,
முன்னே நீயும் போனது எல்லாம் 
எனக்கு சொன்ன பாடம்,,,
இன்னும் 
என்னை 
தேடுகின்றேன் உனக்குள்ளே 
நானும்!

பாலா,,,