மழைவந்தால் போதும் உடன் வந்துவிடுகிறாளே குளிர்மகளும்!
அழைக்காதபோதும்
இல்லங்கள்தோறும்
நுழைந்துவிடுகிறாளே
குளிர்மகளும்!
அடுக்கடுக்காய்க் கம்பளியால் போர்த்தியே தேகத்தைச் சிறைபடுத்தி வைத்தாலும் கட்டுக்காவலைமீறி
தேகந்தொட்டுத் தழுவிட கள்ளத்தனம் செய்து எப்படியோ வந்துவிடுகிறாளே குளிர்மகளும்!
கதகதப்புக்கும் தனக்குமிடையே நடக்கின்ற போர்களிலே தலைகுல்லாக்களும்
கையுறைகளும் காலுறைகளும் கம்பளிச்சட்டைகளும்
குளிர்காய மூட்டிவிடும் நெருப்புமென எத்தனை ஆயுதங்கள் தாக்கும்போதும் அனைத்தையும் தோற்கவைத்து வாகைசூடி வந்துவிடுகிறாளே குளிர்மகளும்!
கொட்டுகிற மழைநீரின் அணைப்புக்குள்ளே பூமிப்பந்து அடைந்துக்கொள்ள தேகங்கள் யாவும் பனிப்பந்தாய் மாற
சில்லென்ற காற்றால் பனிப்பந்து தேகங்கள் நிலைநிறுத்தும்தேராக மாற
செல்லக்குழந்தையின்
அடிகளைத் தாங்கும் பெற்றோராய்
இந்த குளிர்மகளின் தாக்குதலையும் தாங்கிக்கொள்கிறதே
மனதும்!
த.ஹேமாவதி
கோளூர்