Header Ads Widget

Responsive Advertisement

கவிதைத் தமிழின் தலை மதுரை



பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்டவனை
கட்டுக்குள் வைத்தாளடி 
மீனா,
சொக்கனை
பாடவும் செய்தாளடி,,,,
தோழி,
பாடவும்
செய்தாளடி,,,

நன்னெறி தவறாத நக்கீரன் எதிர்நின்று
நற்றமிழ் கேட்டானடி தோழி
அதில்
நடுவனாய் நின்றானடி,,,
தோழி
நடுவனாய்
நின்றானடி,,,,

சொல்லிலே இல்லை குற்றம்,
சிறு சுகத்திலே வந்த குற்றம்,
பொருளிலே என்றானடி 
தோழி 
அதை
கண்ணிலே சொன்னானடி
தோழி,
அவன் நெற்றிக்
கண்ணிலே
சொன்னான்டி

மைத்துணன் மலையனும் 
மேலே,
இறங்கி வர,
தாமதம் பல மண்டபத்தினாலே
கள்ளழகன்
என்றானடி
தோழி
அழகன்
வண்டியூரும் சென்றானடி,
தோழி
அழகன்
வண்டியூரும்
சென்றானடி,,,

ஆண்டாள் மாலையும் வரத்தான் , (அது)
அழகனவன் 
காலையும் தொடத்தான்,
திருமாலி
ருஞ்சோலையில் 
நின்றானடி
தோழி
திக்கெட்டும் வென்றானடி
தோழி
திக்கெட்டும்
வென்றானடி,,,

பாவலர் கூட்ட மொன்று பைந்தமிழ் 
கவியும் பாட,
ஏவலர் பாட்டை கேட்க,, 
அதில் 
வைகையும் வந்து ஆடும்!
தமிழ் கவிதையும்,
"கவிதை தமிழின் தலை" "மதுரை" ".
எனக் கூறும்!
"தேரோடும் நல்ல சீரான மதுரையிலே
ஊரார்கள் கொண்டாடும்
ஒயிலாட்டம்,,, "

பாலா,,,