ஒருவர் சிரிக்க,
ஒருவர் முழிக்க
வந்த கதை
விடுகதை,,,
வாழ்க்கை எல்லாம் விடுகதையாக,,,
விடை தெரியாமல் தேடுகிறேன்,,, ஆடிய ஆட்டம் கூடிய கூட்டம்,
ஓடிய ஓட்டம்,
நாடிய நாட்டம்
தேடியவரெல்லாம்
போடுவதிங்கு விடுகதைதானே,,,, நான் என்று நின்று சொல்பவர் நினைப்பும்,
கேட்டவர் வாழ்வை குறைவாக நினைக்கும்,,,,
தெரிந்தவர் சொல்லி தொடர்ந்து வந்தாலும்,,,
புரிந்தவன் என்று பணிந்தங்கு பார்க்கும்,,,,
பெருங்கதை கேட்க விடுகதை கிடைக்கும்,,,,
விடுகதை கேட்க
விடுதலை கிடைக்கும்,,,,
சுருங்க கூற
மெய்யான வாழ்வை,
மெய்யாக வாழ
புதிராக நிற்கும்
விடுகதை
வேண்டும்!
பாலா,,,