அழகான வரிகள் சுமந்து,,,
ஆழமான கடலில் பிறந்து,,,
இயற்கையில் தானாய் வளர்ந்து,,,
ஈரத்திலே நாளும் வாழ்ந்து,,,
உயிர் சுமந்து நீ இருந்து,,,
ஊட்டம் தந்ததை தான் மறந்து,,,
எட்டும் வரை நீ வளர்த்த உயிரி,
ஏற்றமிகு பல பாதைகள்
கடந்து,
ஐயமில்லா பயணம் செய்ய
ஒரு முறை பார்த்து விட்டு,,, அது
ஓடி மறையக் கண்டு
ஒளடதமாய் இருந்த நீயும்,
அஃதே வழியென நினைத்து,,,,
சலசலக்கும் கிளிஞ்சலாய் பளபளக்கும் வண்டலிலே
பல,,,
உன்னைப்போல்
சில,
பார்ப்பவர் வியந்திடவே
வகை வகையாய் மாலையாக,,,
வாழ்க்கைப் பாடம் சொல்லி வாழ்ந்திட்ட கிளிஞ்சல்களே,,,
அழியாத வாழ்கை வாழ மனிதன் தெரியாமல் தவிக்கையிலே,,,
முழுதாக நீ அறிந்த
முறையை முன்வந்து சொல்வாயாக,,,
பாலா,,,