Header Ads Widget

Responsive Advertisement

விடுகதை




பெண்ணே ஓர் புதிரானவள்
புதுமையானவள்

அவளுக்குள் இருப்பது
ஆயிரமாயிரமான புதிர்கள்

அதை யாராலும் விடுவிக்கவே முடியாது

அவளுள் பல விடுகதைகள் இடியாப்பச் சிக்கல்களாய் தீர்க்க முடியாமல்


தீர்க்க யாரேனும் வந்தால் சிக்கல் அதிகமாகிறதே தவிர தீர்ந்தபாடில்லை

விடை தெரியா விடுகதைக்கு அதை கூறியவரே விடை கூற வேண்டும்

பெண்களின் புதிர்களுக்கு அவர்களாலேயே விடை கூற முடியும்


தி.பத்மாசினி சுந்தரராமன்