பெண்ணே ஓர் புதிரானவள்
புதுமையானவள்
அவளுக்குள் இருப்பது
ஆயிரமாயிரமான புதிர்கள்
அதை யாராலும் விடுவிக்கவே முடியாது
அவளுள் பல விடுகதைகள் இடியாப்பச் சிக்கல்களாய் தீர்க்க முடியாமல்
தீர்க்க யாரேனும் வந்தால் சிக்கல் அதிகமாகிறதே தவிர தீர்ந்தபாடில்லை
விடை தெரியா விடுகதைக்கு அதை கூறியவரே விடை கூற வேண்டும்
பெண்களின் புதிர்களுக்கு அவர்களாலேயே விடை கூற முடியும்
தி.பத்மாசினி சுந்தரராமன்