Header Ads Widget

Responsive Advertisement

வைகறைத் தென்றல்



வான் 

பனிக்குளிரோடு மலராடுது

தேன் சிந்தி வைகறை தென்றலிலே நீராடுது,,,,

பூவானது

பொலிவாகுது

புது மணம் பரப்பி இங்கு பெயர் வாங்குது,,,,,,,,,,


தேன் உண்ண வண்டுகளும் தொட ஏங்குது,,,

வைகறை தென்றல் வர

கண் தூங்குது,,,

வண்டானது

திண்டாடுது

ஆதவனும் வரத்தானே

எதிர் பார்க்குது,,,


ஓரிடம் 

நின்றாலும் 

மலரே நீதான் உயர்நிலை அடையும் 

கலையே!

ஆயிரம் மலரை நான் கண்ட போதும் வைகறையில் காண முடியலையே,,,,


வேருடன் உறவு உனக்கும் உண்டு

வேரை நீயும் பார்த்தது 

இல்லை,,,

வைகறைத் தென்றலை முகர்ந்து நீயும் தந்ததை 

வேரும் அறிந்ததில்லை,,,


பாருக்குள்  

நானும் நீயும் இருக்கையிலே

சோறுக்கு அதுவரை கவலையில்லை,,,

ஏர் முனை பூட்டி உழுதிட

உழவன்,

வருவதும் வைகறை தென்றலிலே!


பாலா